அமானா வங்கி தனது அட்டாளைச்சேனை ATM நிலையத்தினை, நவீன வசதிகள் படைத்த சுய வங்கி நிலையமாக தரமுயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு பணம் மற்றும் காசோலை வைப்பு ஆகியவற்றுடன், நிலையத்தில் இதர வங்கியியல் தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் வாடிக்கையாளர் சேவை முகவர்களையும் கொண்டிருக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெருகேற்றத்துடன், அமானா வங்கியின் வாடிக்கையாளர் வலையமைப்பு தற்போது 57 ஆக அதிகரித்துள்ளதுடன், இவற்றில் கிளைகள் மற்றும் சுய வங்கி நிலையங்கள் போன்றன அடங்கியுள்ளன.
புதிய பிரதேச சபை கட்டடத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை அமானா வங்கி சுய வங்கி நிலையத்தை, வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் அங்குரார்ப்பணம் செய்தார். இந்நிகழ்வில், வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்க செயற்பாடுகளுக்கான உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன், அக்கரைபற்று கிளை முகாமையாளர் சஹிர் அஹமட், பிரதேசத்தின் வியாபார பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
AB Securitas (Pvt) Ltd. உடனான பங்காண்மையில் அமானா வங்கியின் அக்கரைப்பற்று கிளையின் மேற்பார்வையின் கீழ் இந்த நிலையம் இயங்கும்.