ரணிலும் – சஜித்தும் ஒருபோதும் இணையப் போவதில்லை.இது தொடர்பில் ஊடகங்கள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று சபையில் தெரிவித்த அவர்,
ஊடகங்கள் என கூறிக்கொள்ளும் சில அமைப்புகள் ஒன்றிணைந்து ரணிலும் சஜித்தும் ஒன்று சேரப்போவதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ரணிலும், சஜித்தும் ஒருபோதும் இணையப் போவதில்லை.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
ஒரு சில பொய் தகவல்களை பிரசாரப்படுத்திவரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடமிருந்து
தரகுப்பணத்தைப் பெற்றுக்கொண்டு ரணிலும் சஜித்தும் இணையப்போவதாக பிரசாரம் செய்து வருகின்றன. இது உண்மைக்கு புறம்பானது. அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என, சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)