போலிக்கடவுச் சீட்டில் கனடா செல்ல முயன்ற தழிழ் இளைஞரை,விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் தமிழ் இளைஞனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவ்விளைஞர் நேற்றிரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-217 விமானத்தில் தோஹா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.இவர் சமர்ப்பித்த வீசா போலியானதென தெரிய வந்ததும் அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்த குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள்,மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவரை ஒப்படைத்தனர்.