பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்ட ‘தி போல் பிளாஸ்டர்’ கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியை ஏறாவூர் அலிகார் கல்லூரி அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 5–4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.
கொழும்பு சுகததாச அரங்கில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முழு நேர முடிவின்போது இரு அணிகளும் எந்த கோலையும் பெறாத நிலையில், முடிவைத் தீர்மானிப்பதற்கு பெனால்டி சூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் ஸாஹிரா அணி இரண்டாவது முயற்சியில் பந்தை வலைக்குள் செலுத்தத் தவறிய நிலையில் அலிகார் கல்லூரி அணி ஐந்து முற்சிகளிலும் கோல் புகுத்தியது. இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்