Friday, March 29, 2024
Home » காலநிலை மாநாட்டில் தொடர்ந்தும் முரண்பாடு

காலநிலை மாநாட்டில் தொடர்ந்தும் முரண்பாடு

by Rizwan Segu Mohideen
December 11, 2023 4:36 pm 0 comment

டுபாயில் நடைபெறும் COP28 காலநிலை மாநாட்டில் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது.

பூமியை வாட்டும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஒன்றுபட்டுச் செயல்பட முடியாமல் உலக நாடுகள் தடுமாறுகின்றன. உச்சநிலை மாநாடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன.

ஆனால் கருத்தொற்றுமை இல்லை. புதைபடிவ எரிபொருள் தொடர்பாக உலகத் தலைவர்கள் மோதிக்கொள்கின்றனர். டுபாய் COP28 மாநாட்டின் தலைவர் சுல்தான் அல்-ஜாபிர் சில நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உலகத் தலைவர்களிடையே இணக்கத்தை விடவும் கருத்து வேறுபாடே அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரிய புதைபடிவ எரிபொருளைப் படிப்படியாகக் கைவிட வேண்டும் என்ற வேண்டுகோளை உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் எதிர்க்கின்றன. COP28 இறுதி அறிக்கையில், என்னதான் சொல்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் கூறுங்கள் என்று 80க்கும் அதிகமான உலக நாடுகள் கேட்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT