202
கண்டி இந்திய உதவித் தூதரகம் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டினை குறிக்கும் முகமாக நூற்றாண்டு முத்திரை வெளியீட்டு விழா கண்டி அம்பிட்டியவில் அமைந்துள்ள “கோல்டன் கிரவுன் ஹேட்டலில் ” கண்டி உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் எஸ்.ஆதிரா தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. இவ் விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பார்லே, மத்திய மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களான லலித் யூ கமகே, ஏ.ஜே.எம்.முஹம்மில், கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதி தபால் மா அதிபர்,க ண்டி மாவட்ட செயலாளர் , வேடுவ பிரஜைகளின் தலைவர், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.