176
உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் தலைமையிலான பெளத்த, கிறிஸ்தவ மதகுருமார்களைக் கொண்ட குழுவினர் (09) யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கலாநிதி ஜெஸ்டின் ஞானப் பிரகாசத்தை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த உலக தமிழர் பேரவையின் தலைவர், யாழ். மறைமாவட்ட ஆயரை இன்று மதியம் சந்தித்து அவருக்கு நாங்கள் மேற்கொள்ளவுள்ள வேலைத் திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம்.
அவர் எமது திட்டத்தினை வரவேற்பதாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தான் வரவேற்பதாகவும் இந்த திட்டத்தினை செயற்படுத்துமாறும் கோரினார் எனவும் தெரிவித்தார்.
கோப்பாய் குறூப் நிருபர்