Friday, March 29, 2024
Home » கந்தளாய் கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை அன்பளிப்பு
சீன நாட்டின் அன்பளிப்பு

கந்தளாய் கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை அன்பளிப்பு

by damith
December 11, 2023 9:44 am 0 comment

சீன நாட்டின் “ஊஹான் மாகாண மக்கள் மன்றம்” அன்பளிப்பாக வழங்கிய பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் திருகோணமலை மாவட்டம், கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட தி/கந்தளாய் கனிஷ்ட பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வின்போது, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரளவினால் (06) மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு சீனாவின் ஊஹான் மாகாண மக்கள் மன்றம், கிழக்கு மாகாண மாணவர்களுக்கு வழங்குவதற்கென பாடசாலைப் புத்தகப்பைகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

அயல் நாடுகளுடன் சினேகபூர்வ நட்புறவை பேணுவதை நோக்காக கொண்டு சீன நாட்டு மக்கள் மன்றம் இவ் அன்பளிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT