Friday, April 19, 2024
Home » சாய்ந்தமருதில் ‘கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்’ செயலமர்வு

சாய்ந்தமருதில் ‘கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்’ செயலமர்வு

by damith
December 11, 2023 5:55 am 0 comment

நீதி அமைச்சு சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய கருத்தரங்கொன்று “கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் (07) இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீகாவின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.ஐ. முஅஃபிகா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

உளவளத்துறை ஆலோசகர் ஏ. மனுஸ் வளவாளராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமீலுல் இலாஹி, கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான், சாய்ந்தமருது கலாசார உத்தியோத்தர் ஏ.தௌபீக் உட்பட சுமார் 60 இளைஞர், யுவதிகள் நிகழ்ச்சியில் பங்கு பற்றி பயனடைந்ததோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT