Thursday, March 28, 2024
Home » ஒருநாள் தொடர் 2 – 1 என்ற கணக்கில் மேற்கிந்திய அணி வசமானது

ஒருநாள் தொடர் 2 – 1 என்ற கணக்கில் மேற்கிந்திய அணி வசமானது

- ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தெரிவு

by Prashahini
December 10, 2023 1:22 pm 0 comment

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியும், 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று (09) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. மழை காரணமாக போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. பென் டெக்கெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டோன் 45 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதையடுத்து, 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் முறைப்படி 34 ஓவரில் 188 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த அணியின் கெய்சி கார்டி சிறப்பாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆலிக் அதான்சே 45 ஓட்டங்களில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியாக ஆடி 28 பந்தில் 43 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், மேற்கிந்திய அணி 31.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2 – 1 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாகினர்.

இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நாளை மறுநாள் (12) தொடங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT