கொழும்பின் சில பகுதிகளில் இன்று (09) பி.ப. 5.00 மணி முதல் நாளை (10) மு.ப. 9.00 மணி வரையிலான 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, குறித்த காலப் பகுதியில், கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 எனும் சபையின் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)
- கொழும்பு 1 – கோட்டை
- கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
- கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
- கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
- கொழும்பு 5 – ஹெவ்லக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
- கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
- கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
- கொழும்பு 8 – பொரளை
- கொழும்பு 9 – தெமட்டகொட
- கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
- கொழும்பு 11 – புறக்கோட்டை
- கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
- கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
- கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
- கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய