பாணந்துறை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள “தேசகீர்த்தி ஏ.டபிள்யு. எம். மக்கீன் ஹாஜியார் ஞாபகார்த்த கட்டிட தொகுதிக்கான அத்திவாரக்கல் நடும் வைபவவம் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். ரிஸான் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கட்டிடத்திற்கான அடிக்கல்லினை மெக்ஸன்ஸ் குழும தலைவர் மில்பர் மக்கீன், முகாமைத்துவ பணிப்பாளர் மிஸ்வர் மக்கீன், பிரதம நிறைவேற்று அதிகாரி சிமர் மில்பர் மற்றும் தொட்டவத்தை பள்ளிவாசல்களின் தர்மகர்த்தா எம்.ஏ.எம்.ரிஸ்வான் ஆகியோர் நட்டிவைப்பதையும் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் எம்.என்.எம்.தாஹிர் பாஸி, முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)