கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாற்று பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நீரேதடையில் இருந்து நேற்று (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிந்துள்ளனர்.
சில்லிக்குடியாறு அருமண்டகுடம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணகுமார் சுதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்
நீண்ட காலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தனது கடைக்கு வியாபாரப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வீதியில் அருகில் உள்ள நீரோடையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரியை பரிந்துரைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்டூர் தினகரன் நிருபர்