அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவிப்பு
நாட்டுக்குள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படுமென அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 50,000 மெற்றிக் தொன் சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை தீர்மானம் எடுத்தது.
இத்தீர்மானத்தின் படி இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக அரச வர்த்தக பொது கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிதுந்தர தெரிவித்துள்ளார். சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை நேற்றுமுன் தினம் நிறைவடைந்தது. இதையடுத்து இந்தியாவிலி ருந்து அரசி கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.