Friday, March 29, 2024
Home » புலிகளின் சின்னங்களை பயன்படுத்தினால் சிறை

புலிகளின் சின்னங்களை பயன்படுத்தினால் சிறை

by sachintha
December 8, 2023 6:39 am 0 comment

நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவிப்பு

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துகையில், அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தலென்ற பெயரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுவரென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடத்தப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் போன்று காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவர். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. சட்டம், கடமைமையச் செய்யும். நீதிமன்றம் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT