Tuesday, March 19, 2024
Home » பிரிவினைவாதிகளின் முதல் எதிரி நானே நாட்டுக்காக எவருக்கும் ஆஜராக நான் தயார்

பிரிவினைவாதிகளின் முதல் எதிரி நானே நாட்டுக்காக எவருக்கும் ஆஜராக நான் தயார்

by sachintha
December 8, 2023 9:20 am 0 comment

சாணக்கியனுக்கு சபையில் அமைச்சர் அலி சப்ரி பதில்

நாட்டுக்காக நான் செயல்படுவதால், நானே பிரிவினைவாதிகளின் முதலாவது எதிரியென வெளிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளி விவகார அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம்பி முன் வைத்த விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே வெளி விவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராசமாணிக்கம் போன்று பிரிவினைவாத சிந்தனை கொண்டோரிடமிருந்து இதைவிட பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் முதலாவது எதிரி நானே.

நாட்டின் இறைமை சுயாதீனத்தை பாதுகாப்பதற்காகவே, நான் செயற்படுகின்றேன். இதனாலேயே என்னை எதிரியாக பார்க்கின்றனர்.நான் ஒரு சட்டத்தரணி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். என்னிடம் வருபவரிடம் நான் இனம், மதம், மொழி பிரதேசம் பாகுபாடு காட்டுவதில்லை.இதில், எனது அரசியல் பற்றி நான் சிந்திப்பதில்லை. நான் அவர்களுக்காக ஆஜராவேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன.

பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து 22 மில்லியன் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி வகுத்தவர் அவர். அவரது வழக்கில் நான் ஆஜராகி யுள்ளேன். நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாளைக்கும் தேவை யென்றால் அவருக்காக நான் ஆஜராவேன்.

அது எனது தொழில். அதற்காக எவரிடமும் நான் அனுமதி பெற வேண்டிய அவசியம் கிடையாது. ராசமாணிக்கம் என்னிடம் வந்தாலும் எனக்கு பணம் தந்தால் நான் அவருக்காக ஆஜராவேன். நான் ஒரு சட்டத்தரணி. எனது தொழிலே அதுதான்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT