82
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், அதை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட விருப்பம் தெரிவித்து “பல கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.