Thursday, March 28, 2024
Home » தமிழ்நாட்டுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுமென பிரதமர் மோடி உறுதி

தமிழ்நாட்டுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுமென பிரதமர் மோடி உறுதி

by sachintha
December 8, 2023 11:55 am 0 comment

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் ஏற்படுத்த சேதத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்கள் மீள்வதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், புயல் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT