அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கான இலச்சினையை சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் நேற்று (07) வெளியிட்டது.
இந்தியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் வென்று அவுஸ்திரேலிய அணி சம்பியன் ஆனது.
இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் எதிர்வரும் ஜூன் மாதம் 4 முதல் 30 ஆம் திகதி வரை டி20 ஆடவர் உலகக் கிண்ணத் தொடரும், எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் பங்களாதேஷில் டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ளன.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் இலச்சினையில் துடுப்பு, பந்து மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் அடையாளம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.