161
ஸ்ரீலங்கா மலேசிய வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த உறுப்பினர்கள் தின வைபவம் மாண்டரினா ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் எம். எச். கே. எம். ஹமீஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆடம், இரு நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுகளுக்கு நன்றி தெரிவித்தும், சமூகத்திற்குள் தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும் உரை நிகழ்த்தினார்.
ஸ்ரீலங்கா மலேசிய வர்த்தக சங்கத்தின் ( News Letter ) செய்தி மடலின் மூன்றாம் பதிப்பு இதன்போது வெளியிடப்பட்டது. சங்கத்தின் தலைவர் ஹமீஸ், மலேசியாவின் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு செய்திமடலின் முதல் பிரதியை வழங்கினார்.
(ருஸைக் பாரூக்)