Thursday, March 28, 2024
Home » பேருவளை, மரக்கலாவத்தை பகுதியில் மருத்துவ நிலையம் இன்று திறந்து வைப்பு

பேருவளை, மரக்கலாவத்தை பகுதியில் மருத்துவ நிலையம் இன்று திறந்து வைப்பு

by sachintha
December 7, 2023 9:47 am 0 comment

பேருவளை, மரக்கலாகத்தை ஹேன பகுதியில் சீனன்கோட்டையைச் சேர்ந்த சமூகசேவையாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். பாக்கீர் அவர்களினால் சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் சீனன்கோட்டை மக்களினதும் மரக்கலாவத்த மக்களினதும் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ நிலையம் மற்றும் பல்துறைகட்டடம் இன்று (07) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிச்சங்கத் தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியார் மற்றும் பேருவளை பிரதேச செயலாளர் ரஞ்ஜன் பிரியசாந்த பெரேரா ஆகியோரினால் மக்களின் பாவனைக்காக வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. மருத்துவ நிலையத்துடன் கிராம சேவகர் அதிகாரி அலுவலகம், சமுர்த்தி அதிகாரி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான அலுவலகம் என்பன இப்பகுதி கட்டடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக இப்பகுதியில் இருந்துவந்த மருத்துவ நிலையம் இல்லாக் குறை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

இக்கட்டடத்திற்கு சுமார் 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்வில் பள்ளிச் சங்க உறுப்பினர்கள், அரசஅதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT