இனங்களுக்கிடையில் ஒற்றுமை சமாதானம் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பல்லின மக்கள் ஒன்று கூடிய கலை கலாசார நிகழ்வுகள் அண்மையில் நாச்சியாதீவில் இடம் பெற்றது. நாச்சியாதீவு பிரதேச செயலகம், சமுர்த்தி திணைக்களம், நாச்சியாதீவு நன்னீர் மீனவர் சங்கம் ஆகியன இணைந்து இந்த ஒற்றுமை நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருநாள் நிகழ்வாக நாச்சியாதீவு குளத்தில் இடம் பெற்றது.
சமுர்த்தி உதவி பெறும் அங்கத்தவர்கள், பொதுமக்கள், பிரதேச முஸ்லிம்கள் பிரதேச சிங்களவர்கள், தமிழர்கள் பெளத்த, இஸ்லாம், சமய தலைவர்கள், அத்துடன் நாச்சாதுவ பிரதேச செயலாளர், ஹிதோகம பொலிஸார், நாச்சியாதீவு மீனவர் சங்க தலைவர் உட்பட அங்கத்தவர்கள்,நாச்சியாதீவு535, 536 கிராம உத்தியோகத்தர்கள், சமூக சேவை அதிகாரிகள்,அநுராதபுரம் திட்டமிடல் பணிப்பாளர், நாச்சியாதீவு ஜும்மா பள்ளி நிர்வாக தலைவர் தேசமான்ய ஏ.ஆர்.எம்.தாரிக் உட்பட நிர்வாக அங்கத்தவர்கள், உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்லின பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள், விளையாட்டுக்கள், போட்டி நிகழ்வுகள், உணவு பண்டங்கள் பரிமாறல், போன்ற சமூக ஒற்றுமையை காட்டும் முன்மாதிரி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இங்கு சிறப்பாக இடம்பெற்றன.
(திறப்பனை தினகரன் நிருபர்)