Tuesday, March 19, 2024
Home » நாட்டின் பல பகுதிகளிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

நாட்டின் பல பகுதிகளிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

- சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை

by Rizwan Segu Mohideen
December 7, 2023 7:54 am 0 comment

– சில கரையோரப் பகுதிகளில் முற்பகலிலும் சிறிதளவு மழை

இன்றையதினம் (07) நாட்டின் பல மாகாணங்களில், பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் முற்பகல் வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT