194
பதுளை பிரதேசத்தில் விலையுயர்ந்த வலம்புரி சங்கை 03 கோடி ரூபாவுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த நபரொருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், கொள்வனவு செய்பவர்களாக வேடம் பூண்டு வந்த அதிகாரிகள் இச்சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.