இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கொழும்பு “புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “விசேடதேவையுடயோர் நிவாரண சேவை மத்திய நிலையம்” போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவரத்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸின் பணிப்புரையின் பிரகாரம், இ.போ.ச அபிவிருத்தி, பயிற்சி, ஆராய்ச்சி பிரிவு மற்றும் சிவில் பொறியியல் பிரிவினால் இதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
டிசெம்பர் 03ஆம் திகதி உலக விசேடதேவையுடையோர் தினத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டம் இலங்கை பாராளுமன்றத்தின் விசேடதேவையுடையோர் சமூகத்துக்கான நிவாரண ஆலோசனைக் குழுவின் ஆலோசனையையும் இலங்கை விசேட தேவையுடையோர் நிவாரண ஆணைக்குழுவின் வழிகாட்டலையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக, பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச மற்றும் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.