நோயாளர் பாவனைக்காக விரைவில் திறக்க நடவடிக்கை
மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே பரிசோதனை இயந்திரம் (Optima TM XR646 HD) அடுத்த வாரம் முதல் நோயாளர்களுக்கான சிகிச்சைகளுக்காக இணைக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இந்த எக்ஸ்ரே பரிசோதனை இயந்திரம் தென் மாகாணத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒரே எக்ஸ்ரே பரிசோதனை இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மாத்தறை கம்புறுகமுவ புதிய மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றினால் வழங்கப்படும் நோயாளர்களுக்கான சிகிச்சை தேவைகளை கண்டறிந்து, தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால வைத்தியசாலைகளுக்கு கடந்த வாரம் விஜயம் செய்தார். அச்சமயம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே ஆய்வு இயந்திரத்தையும் பார்வையிட்டார்.
இந்த எக்ஸ்ரே இயந்திரம் சுவாச நோய்களைக் கண்டறிவதற்கான பிரத்தியேக மருந்துகளைப் பெறுவதற்கான அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் முக்கியமாக எலும்பியல் மற்றும் சுவாச நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் 150 தொடக்கம் 200 நோயாளர்கள் எக்ஸ்ரே பரிசோதனை சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும், இந்த இயந்திரத்தின் மூலம் தலா 100க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு எக்ஸ்ரே அறிக்கைகளை வழங்க முடியும் எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் சுகாதார செயலாளரிடம் சுட்டிக்காட்டினர்.