Saturday, April 20, 2024
Home » அதிக திறனுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் துரிதம்

அதிக திறனுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் துரிதம்

by gayan
December 6, 2023 7:40 am 0 comment

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு தேவையான பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாத அதிதிறனுள்ள மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

இவற்றை சட்டரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் அவசியம். இதற்கான பரிந்துரைகளை ஆராயுமாறே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அதிதிறனுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்யுமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனைக் கருத்திற்கொண்டு,

போக்குவரத்து அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, போக்குவரத்து அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர், பொலிஸ் திணைக்களம், நிதியமைச்சு மற்றும் உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் இது பற்றிய கூட்டத்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT