138
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி,
கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இதுபற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த மிக்ஜம் சூறாவளியால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.