சீனாவில் சுவாசத்தொகுதியுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதால் ஹொங்கொங், மக்காவ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென தாய்வான் சுகாதார அமைச்சு நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் போன்றோர் இந்நாடுகளுக்கு பயணிப்பதைத் தவிர்த்துக் கொள்வது இன்றியமையாதது எனவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சுவாசத்தொகுதி நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து சீனாவிடம் கேட்டுள்ள உலக சுகாதார அமைப்பு இது கொவிட் தொற்றுக்கு முன் போன்ற நிலையில் இல்லை என்றும் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.