Saturday, April 20, 2024
Home » காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை நிறுத்த வேண்டும்

காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை நிறுத்த வேண்டும்

இஸ்ரேலின் எதேச்சாதிகாரம் எல்லை மீறுகிறது

by damith
December 5, 2023 8:20 am 0 comment

போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் எம்,பி,காஸாவை கைப்பற்றும் திட்டங்களை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

சமாதான உடன்படிக்கையை மீறியுள்ள இஸ்ரேல் மீண்டும் கொலைகாரன்போல் செயற்படத் தொடங்கியுள்ளது. குழந்தைகள்,பெண்கள் மற்றும் அப்பாவிகளைக் கொன்று குவித்து காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் யூத அரசின் போக்குகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கே ஜனநாயகத்தை போதிக்கும் மேற்கு நாடுகள் இஸ்ரேலின் காட்டுமிராண்டிச் செயற்பாடுகளை கண்டிக்காதுள்ளன.இவ்விடயத்தில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை நன்றியுடன் நோக்குகிறேன்.

இருந்தாலும், இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்பும் கேவலமான முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லாவிடின் மத்திய கிழக்கு நாடுகளின் உறவு, ஆதரவுகளை நாம் இழக்க நேரிடும். இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளே தொழில்வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. இதனால், அதிகளவு அந்நியச்செலாவணி நாட்டுக்கு கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.தாக்குதலை நிறுத்துமாறு கோரி 150 எம்பிக்கள் ஒப்பமிட்டுள்ள கடிதத்தை ஐ,நாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்ககை எடுங்கள்.இஸ்ரேலின் விடயத்தில் இனியும் மெத்தனப்போக்குடன் ஜனநாயக நாடுகள் நடந்துகொள்ளக்கூடாது.காதி நீதிமன்றங்களை வினைத்திறனாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்.சிறந்த கல்விமான்களை காதி நீதிபதிகளாக நியமியுங்கள். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் போதுமானதாக இல்லை. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டங்களை செயலுருப்படுத்தியமைக்கு அமைச்சர் விஜேதாச ராஜக்‌ஷவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT