இலங்கை வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராஜதந்திர அறக்கட்டளை பஸாரின் இலாபம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்ற இராஜதந்திர அறக்கட்டளை பஸாரில் சவூதி அரேபியாவும் பங்கேற்றது. இதன் வருமானமும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இவ்வாண்டு நடைபெற்ற அறக்கட்டளை பஸாரில் அமையப் பெற்றிருந்த சவூதி விற்பனையகத்தில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய காட்சிப் பொருட்களுக்கு அதிக கேள்வி இருந்ததாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.
சவூதி அரேபிய தயாரிப்புகள் உட்பட, பிரபலமான சவூதி உணவுகளும் காணப்பட்டமையாள் அங்கு வந்த பார்வையாளர்கள் அவற்றை நுகர்வதில் பெரும் ஆர்வம் காட்டியதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
பல நாடுகள் பங்கு பற்றிய இவ் அறக்கட்டளை பஸாரில் சவூதி அரேபியாவின் பல சுவையான தயாரிப்புகள் மலிவு விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இது ஒரு முன்மாதிரியான செயல் என அங்கு சமுகம் தந்த நுகர்வோர்கள் கருத்து தெரிவித்தனர்.