108
மின் கட்டணம் செலுத்தாத ஏழு இலட்சம் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சாரத்தை பாவிக்கின்றனர். இவர்களில் பத்து வீதத்தினருக்கே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஏனையோர், கட்டணங்களை ஒழுங்காக செலுத்தி வருவதாகவும் அச்சபை அறிவித்துள்ளது. இந்நிலையில்,கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.