கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் இம்முறை ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ வித்தியாலயத்தின் மாணவ, மாணவிகள் சர்வதேச மொழி பரீட்சையில் பெற்றுள்ள பெறுபேறுகள் முழு நாட்டுக்கும் முன்மாதிரியானதென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுவாக எமது நாட்டிலுள்ள கிராமிய பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு சர்வதேச மொழியில் கற்பதற்கான திறமை காணப்படுவதாகவும்,கடந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் சிறந்த பெறுபேறுகள் இதற்கு சான்றாக அமைவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சையில் ஆங்கில மொழியில் 769 மாணவர்கள் தோற்றினர். இதில், 768 மாணவர்கள் சித்தி பெற்று 452 மாணவர்கள் ஆங்கில மொழியில் அதி விஷேட புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்