Friday, April 26, 2024
Home » கொழும்பில் 146ஆவது ரிபாய் கந்தூரி நிகழ்வு

கொழும்பில் 146ஆவது ரிபாய் கந்தூரி நிகழ்வு

by damith
December 5, 2023 10:39 am 0 comment

சுல்தானுல் ஆரிபீன் செய்யிதினா அஹ்மதுல் கபீரூர் ரிபாயி அவர்களின் 146வது ஆண்டு ரிபாயி கந்தூரி சங்கைக்குரிய றிபாய் மௌலானா அல் ஹாஜ் யூ. பி. செய்யித் முஹம்மத் ஆசிக் தங்கல் அவர்களது தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (3) கொழும்பு 12, முஹியத்தீன் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலீபத்துல் ரிபாயி மௌலவி ஏ.சி.ஏ. பளீல் ( காஸீமி), அஜ்வாத் அல் பாஸி அரபிக் கல்லூரி அதிபர் கலீபத்துஷ் ஷாதுலி அஹமத் சூபி (மஹ்ழரி) மற்றும் ரிபாயிய்யா அரபிக் மகளிர் கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லா (ரவ்லி) அவர்களின் விசேட சொற்பொழிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அஹ்சன் மரிக்கார், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, கொழும்பு முன்னாள் மேயர் ஒமர் காமில், முன்னாள் பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால், உம்மு சாவியா பள்ளிவாசல் தலைவர் தேசபந்து மக்கி ஹாஷிம், பலஸ்தீனத்தின் முன்னாள் தூதுவர் பௌஸான் அன்வர், வக்ப் சபை தலைவர் எம். ஐ. எம். மொஹிடீன், ரிபாய் தரீக்கா சங்கத்தின் தலைவர் காசிம் மரிக்கார் பாவா, உப தலைவர் ஹனீபா இஷாக் , செயலாளர் எம். என். நாசிம், ஏனைய தரீக்காக்களின் பிரதிநிதிகள் உட்பட உலமாக்கள், ஸாதாத்மார்கள், முஹிப்பீன்கள், இஃவான்கள் மற்றும் ரிபாயி தரீக் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT