சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்புடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் நான்கு நாள் செயலமர்வு அண்மையில் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. வேலைத்தலங்களில் பாதுகாப்பும், சுகாதாரமும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு செயலமர்வில் நடைமுறையிலுள்ள தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்நோக்கும் சவால்கள், தொழில்சார் பாதுகாப்பும் மற்றும் சுகாதாரத்தை செயல்படுத்தும் முறைகள், தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் பொறுப்புக்கள் என்பன குறித்து இதில் மிக விரிவாக ஆராயப்பட்டன.
இச்செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர் அங்கத்தவர்களும் 70 இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டனர்.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.