148
பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் மூலம் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி விவசாய இரசாயனங்களை தெளிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சராசரியாக ஒரு ஏக்கருக்கு எண்ணெய் தெளிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் ஆகும். எண்ணெய் பயன்பாட்டின் செயற்திறனை சுமார் 50 வீதம் (சீரான தன்மை அதிக துள்ளியம் மற்றும் குறைவான விரயம்) என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ட்ரோன்களை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு இரசாயனங்களை தெளிப்பதற்கான சுற்றுச்சூழல் அமைய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்