Friday, April 26, 2024
Home » சாரண ஆசிரியர்களுக்கான இருநாள் செயலமர்வு

சாரண ஆசிரியர்களுக்கான இருநாள் செயலமர்வு

by damith
December 5, 2023 5:55 am 0 comment

அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரண ஆசிரியர்களுக்கான கலைக்கூறு இரண்டு நாள் பயிற்சி நெறி அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மாகா வித்தியாலயத்தில் நேற்று (04) திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.உதுமாலெவ்வை தலைமையில் இரண்டு நாள் நடைபெறவுள்ள இப்பயிற்சி பாசறைக்கு திருக்கோவில், சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய கல்வி வலயங்கலிருந்து சுமார் ஐம்பது ஆசிரிய, ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை பெறவுள்ளனர்.

சாரணியத்துறையில் உயர் பயிற்சிகளை பெற்ற வாளவாளர்களைக் கொண்ட பயிற்சி குழுவினரால் இப்பயிற்சி நெறிகள் வழங்கப்படவுள்ளதாக பயிற்சிக் குழு தலைவரும், மாவட்ட சாரண ஆலோசாகருமான யூ.எல்.எம்.ஹாசிம் தெரிவித்தார்.

பாலமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT