Friday, April 19, 2024
Home » ஹம்பாந்தோட்டையில் மீண்டும் அடைமழை

ஹம்பாந்தோட்டையில் மீண்டும் அடைமழை

மக்களின் இயல்பு வாழ்வும் பாதிப்பு

by damith
December 5, 2023 9:28 am 0 comment

ஹம்பாந்தோட்டை பிரதேசமெங்கும் மீண்டும் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து வருவதினால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கடந்த பல மாதகாலமாக தொடர்ச்சியாக பெய்துவந்த மழை இடைக்கிடை பெய்ததினைத் தொடர்ந்து மக்கள் தடையின்றி அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்ததோடு விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்து வருவதினால் மீனிற்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. சந்தையில் அரிசி மற்றும் மரக்கறி வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதோடு பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவி வருகின்றன. சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்யவரும் மக்களின் தொகையும் குறைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT