Friday, March 29, 2024
Home » கெக்கிராவ கனேவல்பொலவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கெக்கிராவ கனேவல்பொலவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

இளைஞர்களும் பங்கேற்பு

by damith
December 5, 2023 5:55 am 0 comment

கெக்கிராவ கனேவல்பொலயில் “ரிவர்சைட் போய்ஸ்” இளைஞர்கள் அமைப்பினாள் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் நேற்று முன்தினம் (3) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற்றது. கனேவல்பொல பஸார், கனேவல்பொல ஆற்று வீதி ஆகிய பொது இடங்களில் இந்த சிரமதானம் நடைபெற்றது.

கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிர்வாக பொதுச்சுகாதார ஆய்வாளர் கெ. கருணாதிலகவின் பிரதான மேற்பார்வையில் இச்சிரமதான நிகழ்வு நடைபெற்றதோடு, கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச். திஸாநாயக்க, மரதங்கடவல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.டி. சமரகோன், பொலிஸ் சார்ஜன் பண்டார ஆகியோரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கையாக இவ்வாறான சிரமதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது பாராட்டத்தக்க விடயம் என்றும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்பவற்றை வேறுபடுத்தி மக்கள் அப்புறப்படுத்தினால் குப்பைகளை சரியான முறையில் முகாமை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT