பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சகல உறுப்பினர்களும் சிறப்புரிமைக் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வது அவசியமென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கிடையில் ஏற்பட்ட குழப்பகரமான சம்பவம் தொடர்பில் தமது தலைமையிலான குழு, பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே செயற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் மற்றும் நிலையியற் கட்டளைக்கு இணங்க பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் தீர்மானத்தை அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொள்வது முக்கியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று முன்தினம் சபையில் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)