அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவதும் கடைசியுமான T20 கிரிக்கெட் போட்டியை வென்ற இந்தியா இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
நேற்று (03) பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ரேயஸ் ஐயர் 53 ஓட்டங்கள், அக்சர் படேல் 31 ஓட்டங்கள் , ஜிதேஷ் சர்மா 24 ஓட்டங்கள் மற்றும் ஜெய்ஸ்வால் 21 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அவுஸ்திரேலியா விரட்டியது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Jason Behrendorff மற்றும் Ben Dwarshuis ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஜோஷ் பிலிப் மற்றும் டிராவிஸ் ஹெட் இன்னிங்ஸை தொடங்கினர். சீரான இடைவெளியில் இந்திய பவுலர்கள் அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர். பென் மெக்டெர்மாட், 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ஹெட் 28 ரன்கள், கேப்டன் மேத்யூ வேட் 22 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். இதில் வேட், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங், அபாரமாக பந்து வீசி 3 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Ben McDermott அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mukesh Kumar 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முகேஷ் சர்மா 3 விக்கெட்கள், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அக்சர் படேல், 1 விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அக்சர் படேல் வென்றார். தொடர் நாயகன் விருதை ரவி பிஷ்னோய் வென்றிருந்தார். சூர்யகுமார் யாதவ், இந்த தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 4-1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.