மும்பையில் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளுக்கான ஏலத்தில் இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். ஐந்து அணிகள் பங்கேற்கும் டபிள்யு.பீ.எல் தொடரில் ஒன்பது வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட மொத்த 30 இடங்களை நிரப்புவதற்காகவே இந்த ஏலம் இடம்பெறவுள்ளது.
இதில் அத்தபத்து இந்திய நாணயப்படி 30 இலட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார். அத்தபத்து அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் தொடரில் இரண்டாவது அதிக ஓட்டங்களை பெற்று தொடர் நாயகி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த முறை வீராங்கனை ஏலத்தில் அவர் விலைமபோகவில்லை.