Thursday, March 28, 2024
Home » ‘தங்கச் சமர்’ கால்பந்து: புனித தோமஸ் சம்பியன்

‘தங்கச் சமர்’ கால்பந்து: புனித தோமஸ் சம்பியன்

நுவன் கொடிகார

by damith
December 4, 2023 10:07 am 0 comment

மாத்தறை புனித தோமஸ் கல்லூரி மற்றும் மாத்தறை றாகுல கல்லூரிகளுக்கு இடையிலான 19ஆவது முறையாக நடைபெற்ற ‘தங்கச் சமர்’ கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் மாத்தறை புனித தோமஸ் கல்லூரி வெற்றியீட்டியது.

மாத்தறை உயன்வத்த கால்பந்து மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற போட்டியின் முழு நேரம் முடியும்போது இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. இதனை அடுத்து வெற்றி அணியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது.

அதன்படி 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மாத்தறை புனித தோமஸ் கல்லூரியால் முடிந்தது. 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தங்கச் சமரில் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நாட்டில் இருந்த கொவிட் 19 பெருந்தொற்று நிலை காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை.

இம்முறை கால்பந்து தொடரில் போட்டியை நடத்தும் பாடசாலையாக புனித றாகுல கல்லூரி அணி செயற்பட்டதோடு றாகுல கல்லூரி அதிபர் சமித குருகுலசூரிய, புனித தோமஸ் கல்லூரி அதிபர் பீ.ஏ. வீரக்கொடி ஆகியோரின் வழிகாட்டலில் புனித தோமஸ் அணியின் பயிற்சியாளராக கயன்திக்க ரணசிங்க, வெளிநாட்டு பயிற்சியாளரான பிரின்ஸ் போது, றாகுல கல்லூரி அணியின் பயிற்சியாளராக ஏ.பி. வீரப்புலி ஆகியோர் செயற்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT