Friday, March 29, 2024
Home » தேசகீர்த்தி மக்கீன் ஹாஜியார் ஞாபகார்த்த மூன்று மாடிக் கட்டடத்துக்கு அடிக்கல்

தேசகீர்த்தி மக்கீன் ஹாஜியார் ஞாபகார்த்த மூன்று மாடிக் கட்டடத்துக்கு அடிக்கல்

by sachintha
December 1, 2023 9:21 am 0 comment

பாணந்துறை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள “தேசகீர்த்தி ஏ.டபிள்யு.எம். மக்கீன் ஹாஜியார் ஞாபகார்த்த” புதிய மூன்று மாடிக் கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (01)வெள்ளிக்கிழமை காலையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். ரிஸான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் தொழிலதிபர்களான மில்பர் மக்கீன், மிஸ்வர் மக்கீன், சிமர் மில்பர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டி வைப்பார். தொட்டவத்தை பள்ளிவாசல்கள் தர்மகர்த்தா எம்.ஏ.எம். ரிஸான், பள்ளிவாசல்கள் பரிபாலன சபைத் தலைவர் எம்.என்.எம். தாஹிர்பாஸி, பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மறைந்த மெக்ஸன்ஸ் குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் பிரபல தொழிலதிபரும் பாணந்துறை தொட்டவத்தை பள்ளிவாசல்களின் முன்னாள் ஆயுட்கால தர்மகர்த்தாவுமான தேசகீர்த்தி மர்ஹூம் மக்கீன் ஹாஜியாரின் நினைவாக அவரின் குடும்பத்தினரால் இந்த மூன்று மாடிகள் கொண்ட “தேசகீர்த்தி ஏ.டபிள்யு.எம்.மக்கீன் ஹாஜியார் ஞாபகார்த்த” கட்டிட தொகுதி அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT