Wednesday, April 24, 2024
Home » லேக்ஹவுஸ் முன்னாள் CAO காலமானார்

லேக்ஹவுஸ் முன்னாள் CAO காலமானார்

by sachintha
December 1, 2023 7:48 am 0 comment

சிரேஷ்ட ஊடகவியலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிர்வாக அதிகாரியுமான ரோஹன ஆர்யரத்ன தனது 80 ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இவர்,காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதம நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் 37 வருடங்களுக்கும் மேல், எமது சகோதர பத்திரிகையான டெய்லி நியூஸ் நாளிதழின் துணை ஆசிரியராகவும் வெளிநாட்டு

செய்தி ஆசிரியராகவும் இவர்,பணியாற்றினார்.

அமரர் ரோஹன ஆரியரத்ன, பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருந்தார். அன்னாரது பூதவுடல் ஹொரன,வேவல இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை ஹொரண பொது மயானத்தில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT