Friday, March 29, 2024
Home » வெலிகந்த பஸ் விபத்தில் 30 பேர் காயம்

வெலிகந்த பஸ் விபத்தில் 30 பேர் காயம்

- சாரதியின் அதிக வேகத்தால் நேர்ந்த அனர்த்தம்

by Prashahini
November 30, 2023 11:19 am 0 comment

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று இன்று (30) வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என வெலிகந்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT