439
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று இன்று (30) வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என வெலிகந்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.