Friday, March 29, 2024
Home » COP28 மாநாட்டிற்காக டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

COP28 மாநாட்டிற்காக டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

- 03 விசேட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் திட்டம்

by Prashahini
November 30, 2023 2:32 pm 0 comment

டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28 ) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.

இந்த வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT