Friday, March 29, 2024
Home » மலையுச்சியில் 20 ஏக்கர் நிலம் தாழிறக்கம்; 12 குடும்பங்கள் வெளியேற்றம்

மலையுச்சியில் 20 ஏக்கர் நிலம் தாழிறக்கம்; 12 குடும்பங்கள் வெளியேற்றம்

- பல வெடிப்புகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் அச்சம்

by Prashahini
November 29, 2023 4:08 pm 0 comment

எம்பிலிப்பிட்டிய கொலொன்ன பிரதேசத்தின் புத்கந்த கிராமசேவகர் பிரிவின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் அவதான இடங்களில் வசித்து வந்த 12 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது தங்களது உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர் எனவும், இவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கொலன்ன பிரதேச செயலாளர் இன்று (29) தெரிவித்தார்.

புத்கந்த மலையுச்சி பல வெடிப்புகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து நடத்திய பரிசோதனைகளின் போது பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படலாம் என தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT