Thursday, March 28, 2024
Home » போலியாக பரீட்சை சான்றிதழ்கள் தயாரித்த காரியாலயம் முற்றுகை

போலியாக பரீட்சை சான்றிதழ்கள் தயாரித்த காரியாலயம் முற்றுகை

- ஒரு போலிச் சான்றிதளுக்காக ரூ. 40,000 அறவீடு

by Prashahini
November 29, 2023 3:44 pm 0 comment

பரீட்சை சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு விநியோகித்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் நேற்று (28) மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி காரியாலயம் கேகாலை சுதந்திர மாவத்தையில் இயங்குவதாக கிடைத்த தகவலையடுத்துப் பொலிஸார் இந்நிறுவனத்தின் தரகர் ஒருவரை அணுகி அவர் மூலம் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை பெற்று இக்காரியாலயத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இங்கு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர சான்றிதழ்கள் போலியாக அச்சிடப்பட்டு விற்பனை செய்து வந்துள்ளதுடன் ஒரு போலிச் சான்றிதளுக்காக ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை அறவிடப்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT