Saturday, April 20, 2024
Home » பதில் பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

- இன்று முதல் 3 மாதங்களுக்கு அமுல்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 1:08 pm 0 comment

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 மாதங்களுக்கு ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை அவர், மேல் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடமையாற்றி வந்த பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கான பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அது நீடிக்கப்பட்டு வந்து நிலையில் தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT